search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்"

    20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

    கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.

    இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர்.

    நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.

    எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #TNAssembly
    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று உடுமலையில் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஒரே ஒரு கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கல்வி மாவட்டத்தை 4 ஆக பிரித்து திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.

    இதன்காரணமாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் கல்வி பணி சம்பந்தமாக திருப்பூர் செல்ல வேண்டியதில்லை. உடுமலையில் உள்ள புதிய கல்வி மாவட்ட அலுவலகத்திற்கே செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது.

    இதன்படி உடுமலையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகம் உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செ.சாந்தி வரவேற்று பேசினார்.

    உடுமலையை தலைமையிடமாக கொண்ட புதிய கல்வி மாவட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆண்டு பள்ளி கல்வி துறைக்கென ரூ.27 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் பல கல்விபணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்து உள்ளது. முன்பு 67 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. பின்னர் ஒரு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு 68 ஆக இருந்து வந்தது. அது தற்போது 120 கல்வி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கல்வி மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உங்கள் பணிகள் அந்தந்த பகுதியிலேயே நடைபெற வேண்டும் என்பதால் தான் புதிய கல்விமாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த கல்வியை தருகிறீர்கள். நல்ல மதிப்பெண் பெறுகிறவர்கள்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் நிலை உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களை சிறந்தமாணவர்களாக உருவாக்கும் திறமை ஆசிரியர்களிடம் உள்ளது. முந்தைய காலத்தில் ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருக்கும். இப்போது அந்தநிலை மாறியுள்ளது. இந்த அரசு உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும். இந்த அரசு உங்கள் அரசாக இருந்து ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசாக இருக்கும்.

    தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களை ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு நீங்கள் உருவாக்குகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம்தான் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். அந்த சக்திபடைத்தவர்கள் நீங்கள். தேர்வு முடிவை 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பியது தமிழகத்தில் மட்டும்தான்.

    நீங்கள் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உங்களை நிறைவாக வைத்துக்கொண்டால்தான் கல்வி வளர்ச்சி அடையும். பள்ளி கல்வித்துறையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். இவ்வாறு மாற்றி அமைக்க 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் 8 மாதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளோம். இதற்கான பணியில் 1,700 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி அளிக்க ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களில் இருந்து 600 பயிற்சியாளர்கள் வர உள்ளனர். அடுத்த மாதம் (ஜூலை) முதல் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 முடிந்ததும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது.

    16 மாவட்டங்களில் சி.ஏ. (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) பயிற்சி அளிக்க 500 பேர் தயாராக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வித்துறை தொலைநோக்கு சிந்தனையுடன் பலமாற்றங்களை கொண்டு வந்து செயல்படும். 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருகிறோம். ஆனால் ஆசிரியர்கள் கையில் மடிக்கணினி இல்லை. மாணவர்கள் கையில் உள்ளது. நீங்கள் கவலைப்பட தேவையில்லை. மகிழ்ச்சியான செய்தி வரும்.

    கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். ஒருமாதத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகலாம்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தமிழக மக்கள் வாழ்வு மேம்பாடு அடைவதற்கு எண்ணற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடப்பாண்டில் 50 ஆயிரம் நாட்டுக்கோழி தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் தமிழகத்தில் செயல்படும் 6 கல்லூரிகள் இந்தியாவிலேயே சிறந்த கல்லூரிகளாக விளங்குகின்றன. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மேம்பாட்டுக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தம், முன்னாள் வாரிய தலைவர் கா.லியாகத் அலிகான், கல்வியாளர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, முதல்-அமைச்சர் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கல்வியில் மாற்றம் என்பது அவசியம் என்றார்.

    முடிவில் உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் நன்றி கூறினார். 
    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங் கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #minister #sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் செலவில் அவசர சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் இதுவரை கண்டிராத வகையில் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு முறையில் புதிய புரட்சியை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 வயது நிரம்பிய மாணவர் களை மட்டுமே பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் 3 வயதில் இருந்து பயிற்சி அளிக்கிறார் கள். இதுபற்றி அரசு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டசபையில் தெரிவிக்கப்படும். வெளியில் கருத்து கூற இயலாது.



    தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டண விவரங்களை பள்ளிக்கூடங்களின் முன்பு வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #minister #sengottaiyan
    ×